கேரளாவில் அச்சாகி தமிழகத்தில் தாராளமாக புழங்கும் கள்ள ரூபாய் நோட்டுகள்
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் மாவட்டத்தில் கள்ள ரூபாய் நோட்டுக்கள் புழக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டுநாட்களில் மட்டும் ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டு 2 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் கள்ள ரூபாய் நோட்டுக்கள் அனைத்துமே கேரளாவில் அச்சடிக்கப்பட்டு தமிழகத்தில் புழங்கவிடப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
சமீப காலமாகவே தமிழகத்தில் கள்ள நோட்டுக்கள் புழக்கம் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இது தொடர்பாகஏராளமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இம்மாதத் துவக்கத்தில் பொள்ளாச்சி அருகே கப்பலாங்கரை என்ற ஊரில் நடத்திய வாகனசோதனையின் போது ரூ.5,000 மதிப்புள்ள 100 ரூபாய் கள்ள நோட்டுக்கள் வைத்திருந்த இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் வந்த பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டது.
அந்த இருவரும் தந்த தகவலின் அடிப்படையில் போலீசார் ஒரு வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.75,000மதிப்புள்ள கள்ள ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அங்கிருந்த ஒரு பெண் உள்பட நான்குபேரையும் போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பாக மேலும் பலரைப் போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் கள்ள ரூபாய் நோட்டுக்கள் வைத்திருந்ததாக பொள்ளாச்சியில் ஒருவரையும் கோயம்புத்தூரில்ஒருவரையும் போலீசார் இன்று அதிகாலை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து ரூ.15,000 மதிப்புள்ள 50 ரூபாய் கள்ள நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டன.
முன்னதாக நேற்றும் போலீசார் நடத்திய சோதனையில் ரூ.2.35 லட்சம் மதிப்புள்ள 50 ரூபாய் மற்றும் 100 ரூபாய்கள்ள நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டு, இது தொடர்பாக ஆறு பேரும் கைது செய்யப்பட்டனர்.
இந்தக் கள்ள ரூபாய் நோட்டுக்கள் அனைத்துமே கேரளாவில் அச்சடிக்கப்பட்ட விஷயமும் போலீசாருக்குத் தெரியவந்துள்ளது. இது தொடர்பாகத் தீவிர விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications