புலிகளை ஆதரித்தால் நடவடிக்கை தொடரும்: ஜெயலலிதா உறுதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரவை தொடக்க விழா நிகழ்ச்சியில் விடுதலைப்புலிகளைஆதரித்துப் பேசியவர்கள் குறித்து விவரங்களை சேகரித்து வருகிறோம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்றுகூறினார்.

அனுமதியின்றிக் கட்டப்படும் கட்டடங்களுக்கான வரைமுறைகளை நிர்ணயிப்பது கூறித்து இன்று அவசரமாகக்கூடிய தமிழக அமைச்சரவையின் கூட்டத்திற்குப் பின்னர் நிருபர்களிடம் ஜெயலலிதா பேசுகையில்,

இந்தக் கட்டட விவகாரம் குறித்து ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளநிலையில் அமைச்சரவையில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் குறித்து இப்போதைக்குக் கூற இயலாது.

கடந்த வாரம் நடைபெற்ற உலகத் தமிழர் பேரவை மாநாட்டில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன்,விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோர் புலிகளை ஆதரித்துப் பேசியதாகத் தெரிகிறது.

அவர்கள் பேசிய பேச்சுக்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்ட வருகின்றன. அதன்படி அவர்கள் மீதுநடவடிக்கை எடுப்பது குறித்து பின்னர் அறிவிப்போம்.

இதே போல் தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று தொடர்ந்து கூறி வரும் பாமக நிறுவனர் டாக்டர்ராமதாஸ் மீதும் தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நான்ஏற்கனவே கூறியுள்ளேன் என்றார் ஜெயலலிதா.

மதிமுகவைத் தடை செய்வது குறித்து அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஒரு நிருபர் கேட்ட போது, இதைப்பற்றி எல்லாம் ஒவ்வொரு நாளும் பத்திரிக்கைகளுக்கு நாங்கள் கூறிக் கொண்டிருக்க முடியாது. வேறு ஏதாவதுமுக்கியமான கேள்வி இருந்தால் கேளுங்கள் என்று பதில் கூறினார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+