ஜனாதிபதியாக பதவியேற்றார் கலாம்
டெல்லி:
இந்தியாவின் 12வது ஜனாதிபதியாக பிரபல அணு விஞ்ஞானி "பாரத ரத்னா" டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்இன்று காலை பதவியேற்றார்.
இன்று காலை 9.20 மணிக்கு ஜனாதிபதியின் மாளிகையிலிருந்து டாக்டர் கலாமும், முன்னாள் ஜனாதிபதி கே.ஆர்.நாராயணனும் நாடாளுமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.
குதிரைப் படைகள் சூழ டாக்டர் கலாமும் நாராயணனும் நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் காலை 9.45மணிக்கு வந்து இறங்கினர். அவர்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.என். கிர்பால் மற்றும் துணை ஜனாதிபதிகிருஷ்ணகாந்த் ஆகியோர் வரவேற்று மண்டபத்திற்குள் அழைத்துச் சென்றனர்.
நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் காலை 9.55 மணிக்கு டாக்டர் கலாமுக்கு நீதிபதி பி.என். கிர்பால் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இதையடுத்து இதுவரை டாக்டர் கலாம் அமர்ந்திருந்த ஆசனத்தில் நாராயணன் மாறி அமர்ந்து கொண்டார்.பதவியேற்ற பின் அதுவரை நாராயணன் அமர்ந்திருந்த ஜனாதிபதி ஆசனத்தில் டாக்டர் கலாம் அமர்ந்து கொண்டார்
71 வயதான டாக்டர் கலாம் ஜனாதிபதியாகப் பதவியேற்றவுடன் நாடாளுமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டிருந்தபீரங்கிகள் 21 முறை குண்டுகளை முழங்கின.
டாக்டர் கலாமின் பதவியேற்பு விழாவில் பிரதமர் வாஜ்பாய், துணைப் பிரதமர் அத்வானி, முன்னாள் ஜனாதிபதிவெங்கடராமன், முன்னாள் பிரதமர்கள் ஐ.கே. குஜ்ரால், தேவ கவுடா, அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பீகார் முன்னாள் முதல்வர் லல்லுபிரசாத் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் ராமேஸ்வரத்திலிருந்து வந்திருந்த டாக்டர் கலாமின் அண்ணன் முத்து மீரான் மரைக்காயர், உறவினர்கள்மற்றும் நண்பர்கள், 100 பள்ளிக் குழந்தைகள், விஞ்ஞானிகள், தொழிலதிபர்கள் மற்றும் பல வெளிநாட்டுத்தூதர்கள் ஆகியோரும் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர்.
பதவியேற்ற உடனேயே நாட்டு மக்களுக்கு தன்னுடைய முதல் உரையை ஆற்றினார் டாக்டர் கலாம். அதன் பின்னர்இந்த ஆங்கில உரையின் ஹிந்தி மொழியாக்கத்தை கிருஷ்ணகாந்த் வாசித்தார்.












Click it and Unblock the Notifications