ஊட்டி: நண்பர்கள் கேலி செய்ததால் சாம்பாரில் விஷம் கலந்த மாணவன்
ஊட்டி:
தன்னை ஒல்லியாக இருப்பதாக சக மாணவர்கள் கேலி செய்ததால் கோபத்தில் பள்ளியின் சமையலறையில்வைக்கப்பட்டிருந்த சாம்பாரில் விஷத்தைக் கலந்த ஒரு சிறுவனைப் போலீசார் கைது செய்தனர்.
ஊட்டி அருகே உள்ள ஒரு பகுதியில் 6வது படித்து வந்த ஒரு சிறுவன் பார்ப்பதற்கு மிகவும் ஒல்லியாக இருப்பான்.
மேலும் பயந்த சுபாவமும் கொண்ட அந்தச் சிறுவன் 6வது வகுப்பில் பெயிலாகியும் விட்டதாகக் கூறப்படுகிறது.
அவன் ஒல்லியாக இருப்பதைக் கூறி அவனுடைய பள்ளியைச் சேர்ந்த சக மாணவர்களும் நண்பர்களும் அவனைஅடிக்கடி கேலி செய்வது வழக்கமாம்.
இதனால் மிகவும் நொந்த நிலையில் இருந்த அந்தச் சிறுவன், அவர்கள் மேல் இருந்த ஆத்திரத்தில் நேற்றுபள்ளியிலிருந்த சமையலறைக்குச் சென்றான்.
அங்கு மதிய உணவுடன் சேர்ந்து பரிமாறுவதற்காக வைக்கப்பட்டிருந்த சாம்பாரில் விஷத்தைக் கலந்து விட்டான்.
ஆனால் அதைப் பரிமாறுவதற்கு முன்பாகவே எப்படியோ அது கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. இதனால் சுமார் 110மாணவர்கள் உயிர் பிழைத்தனர்.
இதையடுத்து அந்தச் சிறுவனைக் கைது செய்த போலீசார் அவனைச் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்ப முடிவுசெய்துள்ளனர்.