வைகோவை சந்தித்தார் வீரமணி
Subscribe to Oneindia Tamil
வேலூர்:
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளரான வைகோவை திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கி. வீரமணி இன்று சந்தித்துப் பேசினார்.
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள வைகோவை சந்திப்பதற்காக வேலூர் சிறைக்கு இன்று காலைவீரமணி வந்தார்.
பின்னர் வைகோவைச் சந்தித்து அவருடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த வீரமணி பின்னர் நிருபர்களிடம்கூறுகையில்,
வைகோவுடனான நட்பு காரணமாகவும் மரியாதையின் அடிப்படையிலும் தான் அவரை இன்று நான் சந்தித்தேன்.
மற்ற படி பொடா சட்டத்தை நாங்கள் ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வருகிறோம். இனியும் எதிர்ப்போம்.
தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று கூறியுள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அதற்காகஅளித்துள்ள விளக்கம் ஒரே குழப்பமாக உள்ளது என்றார் வீரமணி.












Click it and Unblock the Notifications