கலாமுக்கு வாழ்த்து அனுப்பிய 2,000 உசிலம்பட்டி மாணவர்கள்
Subscribe to Oneindia Tamil
உசிலம்பட்டி:
இந்தியாவின் புதிய ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமுக்கு உசிலம்பட்டியைச் சேர்ந்த 2,000மாணவ-மாணவிகள் வாழ்த்து அனுப்பியுள்ளனர்.
நாட்டின் 12வது ஜனாதிபதியான டாக்டர் கலாமுக்கு வாழ்த்து மடல் ஒன்றை அனுப்ப உசிலம்பட்டி மற்றும் அதன்சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் முடிவு செய்தனர்.
அதன்படி இதற்காகத் தயாரிக்கப்பட்ட சிறப்பு வாழ்த்து மடலில் அந்த 2,000 மாணவ-மாணவிகளும்கையெழுத்திட்டுள்ளனர்.
பின்னர் அந்த வாழ்த்து மடல் உசிலம்பட்டி வட்டாட்சியர் அன்பழகனிடம் வழங்கப்பட்டது.
டாக்டர் கலாம் பதவியேற்ற நிலையில் அந்த வாழ்த்து மடலை அவருக்கு அன்பழகன் நேற்று அனுப்பி வைத்தார்.












Click it and Unblock the Notifications