""உருப்படியான சிந்தனையே ஜெ.யிடம் கிடையாது"": இளங்கோவன்
சென்னை:
மக்கள் பிரச்சனைகளில் சிறிதும் அக்கறை காட்டாத தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களைத் திசைதிருப்புவதற்காகவே ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் தன்னை அழைக்காத விவகாரத்தைப் பெரிதுபடுத்திவருகிறார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறினார்.
இதுகுறித்து இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் குறிப்பாக தென் மாவட்டங்களில் வறட்சி, பசி மற்றும் பஞ்சம்ஆகியவை தலைவிரித்து ஆடுகின்றன.
இதுபோன்ற மக்கள் பிரச்சனைகளால் மக்கள் தமிழக அரசின் மீது கடும் கோபம் அடைந்துள்ளனர்.
மக்களின் இந்தக் கோபத்தைத் திசை திருப்புவதற்காகவே ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் தன்னை அழைக்காதவிவகாரத்தைப் பெரிதுபடுத்துகிறார்.
கர்நாடக முதல்வரும் ஆந்திர முதல்வரும் தங்கள் மாநிலங்களில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களின்ஒத்துழைப்புடன் பிரதமர் வாஜ்பாயை நேரில் சந்தித்து உரிய நிதிகளைக் கேட்டுப் பெற்று வருகின்றனர்.
ஆனால் மக்களின் நலனில் அக்கறை கொண்டு உருப்படியான சிந்தனையோடு ஒரு காரியத்தையும் ஜெயலலிதாசெய்யாமல் உண்மைகளை மறைத்து வருகிறார் என்றார் இளங்கோவன்.












Click it and Unblock the Notifications