காஞ்சி சங்கராச்சாரியார் - ஜெயலலிதா சந்திப்பு

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரத்துக்கு நேற்று மாலை சென்ற தமிழக முதல்வர் ஜெயலலிதா ஸ்ரீஜெயேந்திர சுவாமிகளுடன் சுமார் ஒருமணி நேரம் வரை ஆலோசனை நடத்தினார்.

நேற்று மாலை 6.45 மணிக்கு தன் தோழி சசிகலாவுடன் காஞ்சி மடத்துக்கு வந்தார் ஜெயலலிதா. அங்கு மகாசுவாமிகள் அதிஷ்டானத்தில் ஜெயலலிதா வழிபட்டார். அதிஷ்டானம் குறித்து ஸ்ரீவிஜயேந்திர சுவாமிகள் அவருக்குவிளக்கிக் கூறினார்.

பின்னர் ஸ்ரீஜெயேந்திர சுவாமிகளின் அறைக்கு ஜெயலலிதாவும் சசிகலாவும் அழைத்துச் செல்லப்பட்டனர்.இருவரும் சுவாமிகளுடன் சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.

தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்துவது குறித்தும் கோவில்களின்சொத்துக்களைப் பாதுகாப்பதற்கு குழுக்களை அமைப்பது குறித்தும் அவர் ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது.

பின்னர் காமாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்ற ஜெயலலிதாவுக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.பின்னர் அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

ஜெயலலிதா வருகையையொட்டி காஞ்சிபுரத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+