சென்னையில் பஞ்சாலை தொழிலாளர்கள் பேரணி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக பஞ்சாலைத் தொழிலாளர்கள் இன்று சென்னையில் கோட்டையைநோக்கிப் பேரணி ஒன்றை நடத்தினர்.
தமிழகத்தில் மூடப்பட்ட பஞ்சாலைகளைத் திறக்க வேண்டும், பஞ்சாலை ஊழியர்களின் ஊதிய விகிதத்தைத் திருத்தவேண்டும் என்பவை உள்ளிட்ட 30 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி இந்தப் பேரணி நடைபெற்றது.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலுமிருந்து வந்திருந்த பஞ்சாலைத் தொழிலாளர்கள் தீவுத்திடல் அருகிலிருந்துகிளம்பி தமிழக அரசு தலைமைச் செயலகம் வரை பேரணி நடைபெற்றது.
தமிழகப் பஞ்சாலைத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் நடந்த இந்தப் பேரணிக்கு அச்சங்கத்தின் தலைவரும்திமுக எம்.பியுமான செ. குப்புசாமி தலைமை வகித்தார்.












Click it and Unblock the Notifications