தமிழக சாப்ட்வேர் நிபுணர்களுக்கு மலேசியாவில் வேலைவாய்ப்பு
சென்னை:
தமிழக சாப்ட்வேர் நிபுணர்களுக்கு மலேசியா கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களாகப் பணிபுரிய வாய்ப்புகள்அளிக்கப்பட உள்ளதாக அந்நாட்டு கல்வி அமைச்சர் முசாபின் முகமது கூறினார்.
தமிழகம் வந்துள்ள முசாபின் முகமது தலைமைச் செயலகத்தில் இன்று காலை முதல்வர் ஜெயலலிதா மற்றும் கல்விஅமைச்சர் தம்பித்துரை ஆகியோரைச் சந்தித்து இதுகுறித்துப் பேச்சு நடத்தினார்.
மேலும் மலேசியப் பல்கலைக்கழகத்தில் இந்தியக் கல்வி மையம் ஒன்றை அமைப்பதற்கும் சென்னைப்பல்கலைக்கழகத்தில் மலேசியக் கல்வி மையம் ஒன்றை அமைப்பதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மலேசியாவில் கணிப்பொறித் துறை, உயிர் தொழில்நுட்பத் துறை மற்றும் ஆங்கிலக் கல்வித்துறை ஆகியவற்றில்தமிழகத்தைச் சேர்ந்தவர்களை ஆசிரியர்களாக நியமிக்கவும் மலேசிய அமைச்சர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜெயலலிதாவுடனும் தம்பித்துரையுடனும் அவர் விரிவான ஆலோசனை நடத்தினார்.
அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் பாலகுருசாமி மற்றும் சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர்டாக்டர் இன்னாசிமுத்து ஆகியோரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது உடனிருந்தனர்.












Click it and Unblock the Notifications