கடலூர் அருகே வேன்-பஸ் பயங்கர மோதல்: 4 சென்னை ஆசிரியர்கள், வேன் டிரைவர் பலி
கடலூர்:
கடலூர் அருகே வேனும் பஸ்சும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் சென்னையைச் சேர்ந்த 4 ஆசிரியர்கள்மற்றும் வேன் டிரைவர் ஆகியோர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
சென்னை-திருவெற்றியூரில் உள்ள ஒரு கல்லூரியைச் சேர்ந்த 11 ஆசிரியர்கள் ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா செல்லமுடிவு செய்தனர். "மஹிந்திரா" வேன் ஒன்றில் அவர்கள் நேற்று இரவு கிளம்பினர்.
இன்று அதிகாலை 1 மணியளவில் கடலூரை அடுத்த ராமநத்தம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்தஒரு அரசு பஸ் இந்த வேன் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் வேனில் இருந்த தங்கமணி, செந்தில்குமார், வெங்கடேசன் மற்றும் சிவகுமார் ஆகிய 4 ஆசிரியர்கள்அந்த இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களைத் தவிர வேன் டிரைவர் தியாகராஜனும்உடல் நசுங்கி இறந்தார்.
காயமடைந்த மற்ற 7 ஆசிரியர்களும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.