ஜெ. ஊழல் வழக்குகளை விசாரிக்கும் தனி நீதிமன்றம் மூடல்
சென்னை:
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான ஊழல் வழக்குகளை விசாரித்து வந்த 3 தனி நீதிமன்றங்களில் முதலாவதுநீதிமன்றத்தின் காலம் இன்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து அந்த நீதிமன்றம் மூடப்படுகிறது.
முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் ஜெயலலிதா உள்ளிட்ட அமைச்சர்கள் செய்த ஊழல்களை விசாரிப்பதற்காககடந்த திமுக ஆட்சிக் காலத்தின் போது 1997ம் ஆண்டு ஆறு தனி நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன.
டான்சி, ஸ்பிக், சொத்துக் குவிப்பு, கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஓட்டல், லண்டன் ஓட்டல் உள்ளிட்டபத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் ஜெயலலிதா உள்ளிட்ட அதிமுக அமைச்சர்கள் மீது தொடரப்பட்டன.
இந்த ஊழல் வழக்குகளை தனி நீதிமன்றங்கள் தான் விசாரித்து வந்தன.
இந்த வழக்குகளில் டான்சி, கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே உள்ளிட்ட சில வழக்குகளில் ஏற்கனவே தீர்ப்புகள்வழங்கப்பட்டு விட்டன.
இதையடுத்து தனி நீதிமன்றங்களில் தொடரப்பட்டிருந்த வழக்குகளின் எண்ணிக்கை குறைந்ததைத் தொடர்ந்துகடந்த ஆண்டே மூன்று நீதிமன்றங்களை தமிழக அரசு மூடிவிட்டது.
மீதமுள்ள மூன்று நீதிமன்றங்களின் காலமும் கடந்த ஜூன் 30ம் தேதியோடு முடிவடைந்தது.
ஆனால் முதலாவது நீதிமன்றம் ஜூலை 31ம் தேதி (இன்று) வரை செயல்படும் என்றும் 2வது மற்றும் 3வதுநீதிமன்றங்களின் காலம் அடுத்த ஆண்டு (2003) ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
அதன்படி முதலாவது நீதிமன்றம் இன்றுடன் மூடப்படுகிறது. முதலாவது தனி நீதிமன்ற நீதிபதி அன்பழகன் இன்றுஓய்வு பெறுகிறார். இதற்காகவே இந்தத் தனி நீதிமன்றத்தின் காலம் நீட்டிக்கப்பட்டிருந்தது.
முதலாவது நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த சொத்துக் குவிப்பு வழக்கு, ஸ்பிக் ஊழல் வழக்கு மற்றும் லண்டன்ஓட்டல் வழக்கு ஆகியவை நாளை முதல் இரண்டாவது தனி நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
இரண்டாவது தனி நீதிமன்ற நீதிபதி ராஜமாணிக்கம் இந்த வழக்குகளையும் சேர்த்து விசாரிப்பார்.
-
சிஸ்டமே மாறப்போகுது.. சென்னையின் போக்குவரத்தையே தடம் தெரியாமல் மாற்ற போகும்.. தங்கமான பிளான் -
தவெக மீதான தாக்குதல்கள்: விஜய் ‘இமேஜை' பாதித்துள்ளதா? களம் சொல்வது என்ன? -
தேர்தல் நேரத்தில் கல்லா கட்டும் 'குட்டி குட்டி' நிறுவனங்கள்.. சத்தமே இல்லாமல் நடக்கும் மெகா பிஸ்னஸ்! -
பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. இன்னும் 2 நாட்கள் தான் இருக்கு! உடனே விண்ணப்பிங்க -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க












Click it and Unblock the Notifications