ஜெ. ஊழல் வழக்குகளை விசாரிக்கும் தனி நீதிமன்றம் மூடல்
சென்னை:
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான ஊழல் வழக்குகளை விசாரித்து வந்த 3 தனி நீதிமன்றங்களில் முதலாவதுநீதிமன்றத்தின் காலம் இன்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து அந்த நீதிமன்றம் மூடப்படுகிறது.
முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் ஜெயலலிதா உள்ளிட்ட அமைச்சர்கள் செய்த ஊழல்களை விசாரிப்பதற்காககடந்த திமுக ஆட்சிக் காலத்தின் போது 1997ம் ஆண்டு ஆறு தனி நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன.
டான்சி, ஸ்பிக், சொத்துக் குவிப்பு, கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஓட்டல், லண்டன் ஓட்டல் உள்ளிட்டபத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் ஜெயலலிதா உள்ளிட்ட அதிமுக அமைச்சர்கள் மீது தொடரப்பட்டன.
இந்த ஊழல் வழக்குகளை தனி நீதிமன்றங்கள் தான் விசாரித்து வந்தன.
இந்த வழக்குகளில் டான்சி, கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே உள்ளிட்ட சில வழக்குகளில் ஏற்கனவே தீர்ப்புகள்வழங்கப்பட்டு விட்டன.
இதையடுத்து தனி நீதிமன்றங்களில் தொடரப்பட்டிருந்த வழக்குகளின் எண்ணிக்கை குறைந்ததைத் தொடர்ந்துகடந்த ஆண்டே மூன்று நீதிமன்றங்களை தமிழக அரசு மூடிவிட்டது.
மீதமுள்ள மூன்று நீதிமன்றங்களின் காலமும் கடந்த ஜூன் 30ம் தேதியோடு முடிவடைந்தது.
ஆனால் முதலாவது நீதிமன்றம் ஜூலை 31ம் தேதி (இன்று) வரை செயல்படும் என்றும் 2வது மற்றும் 3வதுநீதிமன்றங்களின் காலம் அடுத்த ஆண்டு (2003) ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
அதன்படி முதலாவது நீதிமன்றம் இன்றுடன் மூடப்படுகிறது. முதலாவது தனி நீதிமன்ற நீதிபதி அன்பழகன் இன்றுஓய்வு பெறுகிறார். இதற்காகவே இந்தத் தனி நீதிமன்றத்தின் காலம் நீட்டிக்கப்பட்டிருந்தது.
முதலாவது நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த சொத்துக் குவிப்பு வழக்கு, ஸ்பிக் ஊழல் வழக்கு மற்றும் லண்டன்ஓட்டல் வழக்கு ஆகியவை நாளை முதல் இரண்டாவது தனி நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
இரண்டாவது தனி நீதிமன்ற நீதிபதி ராஜமாணிக்கம் இந்த வழக்குகளையும் சேர்த்து விசாரிப்பார்.












Click it and Unblock the Notifications