புதுவையில் கைதான கொலையாளிகளுக்கு ஆந்திர நக்சலைட்டுகளுடன் தொடர்பு?
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் நேற்று துப்பாக்கிச் சண்டை போட்டு பிடிக்கப்பட்ட 2 கூலிப்படை கொலையாளிகளுக்கும் ஆந்திரநக்சலைட்டு தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
சுமார் 13 கொலை வழக்குகளில் தொடர்புடைய திருச்சியைச் சேர்ந்த பாரதி மற்றும் செல்வம் ஆகிய இருரவுடிகளும் கடந்த ஏழு மாதங்களாக பாண்டிச்சேரியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் ஒரு பெண் மற்றும்குழந்தையுடன் தங்கியிருந்தனர்.
இவ்விஷயம் திருச்சி போலீசாருக்குத் தெரிய வந்தது. உடனே அங்கு விரைந்த திருச்சி போலீசார் பாண்டிச்சேரிபோலீசாருடன் சேர்ந்து கொண்டு அந்த வீட்டை முற்றுகையிட்டனர்.
பின்னர் ஐந்து மணி நேரம் அந்த ரவுடிகளுக்கும் போலீசாருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டைநடைபெற்றது. இதைத் தொடர்ந்து மைக் மூலம் பேசிய போலீசார் அந்த ரவுடிகளை சரணடையும்படி கூறினர்.
இதையடுத்து செல்வமும் பாரதியும் தங்கள் சட்டைகளைக் கழற்றி விட்டு கைகளை மேலே தூக்கியவாறுபோலீசாரிடம் சரணடைந்தனர்.
இதன் பிறகு நேற்று இரவு விடிய விடிய அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இந்த இரண்டு கொலையாளிகளுக்கும் ஆந்திர நக்சலைட் தீவிரவாதிகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதுவிசாரணையின் போது தெரிய வந்துள்ளது.
மேலும் பலவிதமான வெடிகுண்டுகளைத் தயாரித்து இயக்குவதில் பாரதி கைதேர்ந்தவன் என்பதும் தெரிய வந்தது.அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே இந்த இரண்டு கொலையாளிகளிடமும் விசாரணை நடத்துவதற்காக சென்னை மற்றும்மதுரையிலிருந்தும் தனிப் படை போலீசார் பாண்டிச்சேரிக்கு விரைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications