காஷ்மீரில் செப்டம்பர், அக்டோபரில் 4 கட்ட தேர்தல்
டெல்லி:
காஷ்மீர் சட்டசபைக்கு வரும் செப்டம்பர் 16, 24, அக்டோபர் 1 மற்றும் 8 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் இன்று அறிவித்தது.
இதைத் தொடர்ந்து ராணுவத்தினரும் பதிலடித் தாக்குதலில் ஈடுபட்டதில் நான்கு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
சர்வதேசப் பிரச்சனையில் சிக்கியுள்ள காஷ்மீரில் நடக்கும் தேர்தல் குறித்து உலகமே மிகவும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.
பாகிஸ்தானிலிருந்து தொடர்ந்து இந்தியாவுக்குள் ஊடுருவிக் கொண்டிருக்கும் தீவிரவாதிகள் காஷ்மீர் தேர்தலை சீர்குலைக்க முயற்சிக்கலாம் என்று கருதப்படுவதால் கடும் பாதுகாப்புடன் தேர்தல் நடத்த தலைமை தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் வரும் செப்டம்பர் 16ம் தேதி காஷ்மீரில் முதற்கட்டத் தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் கமிஷனர் ஜே.எம். லிங்டோ இன்று நிருபர்களிடம் கூறினார்.
இதைத் தொடர்ந்து 2வது கட்டத் தேர்தல் செப்டம்பர் 16ம் தேதியிலும், அடுத்த கட்டத் தேர்தல் அக்டோபர் 1ம் தேதியிலும் கடைசிக் கட்டத் தேர்தல் அக்டோபர் 8ம் தேதியிலும் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள மக்கள் வாக்களிப்பதற்கு வசதியாக சிறப்பு வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும் என்று கூறிய லிங்டோ, அனைத்துத் தொகுதிகளிலும் மின் வாக்குப்பதிவு எந்திரமே பயன்படுத்தப்படும் என்றம் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications