அமர்நாத்தில் கொல்லப்பட்ட திருவண்ணாமலை பக்தரின் உடல் தகனம்
திருவண்ணாமலை:
அமர்நாத்தில் லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாதியால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த பாலசந்திரன் என்றபக்தரின் உடல் இன்று அதிகாலை திருவண்ணாமலையில் தகனம் செய்யப்பட்டது.
கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை காஷ்மீரில் உள்ள பகல்காம் அருகே அமர்நாத் யாத்ரீகர்கள் தங்கியிருந்துமுகாமுக்குள் நுழைந்து ஒரு தீவிரவாதி சராமாரியாகத் துப்பாக்கியால் சுட்டான்.
இந்தத் திடீர்த் தாக்குதலில் தூங்கிக் கொண்டிருந்த 8 பக்தர்கள் அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தனர்.மற்றொருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார். இச்சம்பவத்தில் சுமார் 50 பேர் வரை குண்டுக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சுட்டுக் கொல்லப்பட்ட ஒன்பது பேரில் தமிழக பக்தரும் ஒருவர். இந்தியன் வங்கி ஊழியரான அவர் பெயர்பாலசந்திரன். இவர் திருவண்ணாமலையைச் சேர்ந்தவர்.
பாலசந்திரனின் உடல் நேற்று திருவண்ணாமலைக்குக் கொண்டுவரப்பட்டது. இன்று காலை வரை அவருடையஉடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக அவருடைய வீட்டில் வைக்கப்பட்டிருந்தது.
ஏராளமான மக்கள் பாலசந்திரனின் வீட்டுக்கு வந்து அவருடைய உடலுக்குக் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் இன்று அதிகாலை பாலசந்திரனின் உடன் சுடுகாட்டுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அங்குஇறுதிச் சடங்குகள் செய்து முடிக்கப்பட்ட பின்னர் அவருடைய உடலுக்கு மூத்த மகன் தீ மூட்டினார்.
அமர்நாத்தில் அவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications