ராகிங்கை தட்டிக் கேட்ட கல்லூரி மாணவர் மீது தாக்குதல்
புதுக்கோட்டை:
ராகிங் பிரச்சனை காரணமாக ஏற்பட்ட மோதலில் புதுக்கோட்டை அரசு கலைக் கல்லூரியின் பிற்பட்ட வகுப்புமாணவர்களுக்கான விடுதி தாக்கப்பட்டது. இதில் பல மாணவர்கள் காயமடைந்தனர்.
இந்தக் கல்லூரியைச் சேர்ந்த முதலாமாண்டு வகுப்பு மாணவர் நாகராஜ் என்பவர் இரண்டாமாண்டு மாணவர்களால்ராகிங் செய்யப்பட்டார்.
இதையடுத்து மூன்றாமாண்டு படிக்கும் தனது நண்பர் கார்திக்கிடம் கூறியுள்ளார் நாகராஜ்.
உடனடியாக சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் சென்ற கார்த்திக் ராகிங்கில் ஈடுபட வேண்டாம் என்று கூறினார்.இதைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பிற்பட்ட வகுப்பு மாணவர்களுக்கான விடுதியில் புகுந்து சிலமாணவர்கள் தாக்குதல் நடத்தினர். இங்கு தான் கார்த்திக் தங்கியுள்ளார். இந்தத் தாக்குதலில் சில மாணவர்கள்காயமடைந்தனர்.
இதையடுத்து அங்கு உடனடியாக போலீஸார் வரவழைக்கப்பட்டனர். மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி.ஆகியோரும் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அந்த விடுதிக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.
கடந்த மாதம் தான் திருச்சி ஈ.வே.ரா. அரசு கலைக் கல்லூரியில் ராகிங்கைத் தட்டிக் கேட்ட அழகர்சாமி என்றமாணவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார் என்பது நினைவிருக்கலாம். இந்நிலையில் புதுக்கோட்டையிலும்ராகிங் தொடர்பாக மாணவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications