ஒரு அபலைப் பெண்.. டிவி பேட்டி.. ஒரு தற்கொலை

Subscribe to Oneindia Tamil

மேல்மருவத்தூர்:

தன்னை கர்ப்பமாக்கி கைவிட்ட காதலன் குறித்து காதலி விஜய் டிவியில் கருத்துக் கூறினார். இதையடுத்து அந்தக்முன்னாள் காதலன் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

ஸ்டார் டிவியில் ஒளிபரப்பாகும் ஓப்ரா வின்பிரே நிகழ்ச்சி போல, அதன் தமிழ் சானலான விஜய் டிவியில், நடிகைலட்சுமி வழங்கும் கதையல்ல நிஜம் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

பாதிக்கப்பட்ட பெண்களின் பேட்டி இதில் இடம் பெறுகிறது.

இந் நிலையில், கதையல்ல நிஜத்தில் இடம் பெற்ற ஒரு பேட்டி ஒரு உயிரைப் பறித்துள்ளது

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே உள்ள கிராமம் கிளியா நகர். இந்தப் பகுதியைச் சேர்ந்த ஜான்அருள் சிங். இவருக்கும் மதுராந்தகம் அருகே உள்ள எண்டத்தூர் என்ற பகுதியைச் சேர்ந்த ராஜலட்சுமி என்றபெண்ணும் காதலித்து வந்தனர்.

இருவரும் நெருங்கிப் பழகியதில் ராஜலட்சுமி கர்ப்பமடைந்தார்.

இதையடுத்து தன்னை உடனடியாக கல்யாணம் செய்து கொள்ள அருள் சிங்கை, ராஜலட்சுமி வற்புறுத்தியுள்ளார்.ஆனால் அருள் சிங் மறுத்துள்ளார். இதையடுத்து உத்திரமேரூர் போலீஸில் ராஜலட்சுமி புகார் செய்தார்.

தன் அடிப்படையில் அருள் சிங் கைது செய்யப்பட்டார். சமீபத்தில் அவர் ஜாமீனில் விடுதலையாகி வெளியேவந்தார்.

ராஜலட்சுமியின் கதை, சமீபத்தில் விஜய் டிவியின் கதையல்ல நிஜத்தில் ஒளிபரப்பானது. அதில், எனக்குப் பிறந்தகுழந்தைக்கு அருள் சிங் தான் அப்பா. அவரைக் கல்யாணம் செய்யாமல் விட மாட்டேன். முடியாவிட்டால்அவருக்கு சரியான தண்டனை வாங்கிக் கொடுப்பேன் என்று உறுதியாக கூறியிருந்தார்.

இந்த நிகழ்ச்சியை அருள் சிங் பார்த்துள்ளார். தான் செய்த தவறு தன்னை வருத்த மனம் உடைந்தார்.

தனது வீட்டுக்கு அருகே மரத்தில் அருள் சிங் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந் நிகழ்ச்சிஅப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+