For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக சுங்க அதிகாரி வீடுகளில் சி.பி.ஐ. திடீர் சோதனை: ரூ.58 லட்சம், கார்கள் பறிமுதல்

Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை சுங்க வரித்துறை இணை இயக்குநரின் சென்னை மற்றும் ராமநாதபுரம் வீடுகளில் சி.பி.ஐ. அதிகாரிகள்நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் ரொக்கப் பணம், கார்கள் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இந்தியா முழுவதிலும் நேற்று அரசு அதிகாரிகள் வீடுகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். சுமார்114 இடங்களில் வருமானத்துக்கு அதிகமாக அதிகாரிகள் சேர்த்திருந்த ரூ.7 கோடி மதிப்புள்ள சொத்துக்கள்,கிலோ கணக்கில் தங்கக் கட்டிகள் மற்றும் தங்க நகைகள் மற்றும் ரூ.1.52 கோடி ரொக்கப் பணம் ஆகியவைபறிமுதல் செய்யப்பட்டன.

சி.பி.ஐ. சோதனையின் ஒரு பகுதியாக தமிழகத்தில் சுங்க வரித்துறை இணை இயக்குநர் வேலுவின் சென்னைமற்றும் ராமநாதபுரம் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.

வேலுவின் சென்னை வீட்டிலும் ராமநாதபுரம் மாவட்டம் முத்துவயல் கிராமத்தில் உள்ள வீட்டிலும் நேற்றுமுழுவலும் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது, 3 கார்கள், 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ரூ.58 லட்சம் மதிப்புள்ள ரொக்கப் பணம்மற்றும் ஆவணங்கள் ஆகியவை வேலுவின் வீடுகளிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X