மார்த்தாண்டத்தில் அதிருப்தியாளர்கள் போட்டி மாநாடு
நாகர்கோவில்:
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தை எங்களிடமிருந்து யாராலும் பறிக்க முடியாது என்றுஅதிருப்தி தமாகா எம்.எல்.ஏவான டாக்டர் குமாரதாஸ் கூறினார்.
மதுரையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முன்னிலையில் நாளை அக்கட்சியுடன் தமாகாஇணையவுள்ள நிலையில் மார்த்தாண்டத்தில் அதிருப்தி தமாகா எம்.எல்.ஏக்கள் போட்டி மாநாடு நடத்துகின்றனர்.தாங்கள் தான் உண்மையான தமாகாவினர் என்பதையும் அவர்கள் அந்த மாநாட்டில் அறிவிக்கவுள்ளனர்.
இது தொடர்பாக நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் குமாரதாஸ் பேசுகையில்,
தமாகா-காங்கிரஸ் இணைப்பை எதிர்க்கும் உண்மையான தமாகா தொண்டர்களுக்குத் தான் சைக்கிள் சின்னமும்தமாகா கொடியும் சொந்தமானது. தேவைப்பட்டால் இது குறித்து தேர்தல் கமிஷனிடம் புகார் கொடுக்கப்படும்.
அந்த இரண்டையும் வாசன் போன்றவர்கள் உபயோகிக்க முடியாது. மூப்பனார் எதற்காக கட்சியைஆரம்பித்தாரோ, அந்த நோக்கத்தையே வாசன் குழி தோண்டிப் புதைத்து விட்டார்.
மூப்பனார் மறைவுக்குப் பின் கட்சிக்குள் கோஷ்டிப் பூசல் எழுவதைத் தடுக்கவே வாசனைத் தலைவராக்கினோம்.ஆனால் அவரோ காங்கிரஸ் கட்சியிடம் தமாகாவை விற்று விட்டார்.
மார்த்தாண்டத்தில் ஆகஸ்ட் 14ம் தேதி (நாளை) நடைபெறும் மாநாட்டுக்குப் பிறகு அடுத்த கட்ட நடவடிக்கைகுறித்து முடிவெடுப்போம் என்றார் குமாரதாஸ்.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications