சென்னை போலீசாரிடம் ஜெ. குறைகேட்பு: இடமாற்றம் கோரி விண்ணப்பங்கள் குவிந்தன
சென்னை:
போலீசாரிடம் குறை கேட்கும் நிகழ்ச்சியின் கடைசிக் கட்டமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று சென்னைமாநகரப் போலீசாரிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
இந்தியாவிலேயே முதல் முறையாக போலீசாரிடம் குறை கேட்கும் நிகழ்ச்சியை கடந்த ஜூலை 26ம் தேதிஜெயலலிதா அறிமுகப்படுத்தினார்.
இதையடுத்து கடந்த 20 நாட்களில் தெற்கு, மேற்கு, மத்திய மற்றும் வடக்கு மண்டலங்களைச் சேர்ந்த 7,000க்கும்மேற்பட்ட போலீசார், ஜெயில் காவலர்கள் மற்றும் தீயணைப்புத்துறையினர் ஆகியோரிடம் குறைகளைக்கேட்டறிந்த ஜெயலலிதா, அவர்களிடமிருந்து மனுக்களையும் பெற்றுக் கொண்டார்.
கடந்த 7ம் தேதி வடக்கு மண்டலப் போலீசாருடன் சென்னை மாநகரப் போலீசாரையும் ஜெயலலிதா சந்தித்து குறைகேட்பதாக இருந்தது. ஆனால் அந்த ஒரே நாளில் 3,000க்கும் மேற்பட்ட போலீசாரைச் சந்திக்க முடியாது என்பதால்வடக்கு மண்டலப் போலீசாரை மட்டும் அன்று அவர் சந்தித்தார்.
இந்நிலையில் இன்று காலை தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் சென்னை மாநகரப் போலீசாரைச் சந்தித்துஅவர்களுடைய குறைகளை ஜெயலலிதா கேட்டறிந்தார்.
இன்று மட்டும் மொத்தம் 1,764 போலீசார், ஜெயில் காவலர்கள் மற்றும் தீயணைப்புத்துறையினர் ஜெயலலிதாவைச்சந்தித்து தங்கள் குறைகளைக் கூறி மனுக்களையும் கொடுத்தனர்.
பெரும்பாலானவர்கள் தங்களுக்கு இடமாற்றம் வேண்டுமென்று கோரியே மனுக்களைக் கொடுத்தனர்.
இத்துறைகளைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களும் இன்று ஜெயலலிதாவைச் சந்தித்து மனுகொடுத்துள்ளனர்.
முன்னதாக போலீசார் முன்பாக ஜெயலலிதா பேசுகையில்,
இந்தியாவிலேயே தமிழகக் காவல்துறை தான் முதலிடத்தைப் பெற்றுள்ளது. அந்த அளவுக்கு தமிழகப் போலீசார்சிறப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.
சட்டம்-ஒழுங்கைக் காப்பதிலும் தமிழகப் போலீசார் தான் சிறந்து விளங்குகின்றனர்.
மேலும் நாட்டிலுள்ள மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் குற்றங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகஉள்ளது. இதே நிலையே தமிழகத்தில் தொடர்ந்து நீடிக்க வேண்டும்.
போலீசாரின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என்றார் ஜெயலலிதா.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications