தி.கவையும் தடை செய்ய சு. சுவாமி கோரிக்கை
சென்னை:
தமிழ் பிரிவினைவாதத்தை ஆதரித்து வரும் திராவிடர் கழகத்தையும் தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என்றுஜனதா கட்சித் தலைவர் டாக்டர் சுப்ரமணியம் சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக சுவாமி இன்று சென்னையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
பழ. நெடுமாறன் தலைமையிலான தமிழர் தேசிய இயக்கம் தடை செய்யப்பட்டிருப்பதை நான் வரவேற்கிறேன்.
ஏற்கனவே அவரையும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவையும் கைது செய்ததன் மூலம் இந்தியாவின்ஒற்றுமையைப் பாதுகாப்பதில் வல்லவர் என்று ஜெயலலிதா நிரூபித்தார்.
இந்நிலையில் தமிழர் தேசிய இயக்கத்தையும் அவர் தடை செய்திருப்பதன் மூலம் நாட்டின் ஒற்றுமையைப் பேணிக்காப்பதில் அக்கறையுள்ளவர் என்று ஜெயலலிதா மீண்டும் நிரூபித்துள்ளார்.
ஆனாலும் தமிழ் பிரிவினைவாதத்தைத் தொடர்ந்து ஆதரித்து வரும் வீரமணி தலைமையிலான திராவிடர்கழகத்தையும் தமிழக அரசு விரைவில் தடை செய்ய வேண்டும்.
பல ஆண்டு காலமாக ஜனதா கட்சி இதற்கான வேண்டுகோளை விடுத்துக் கொண்டு தான் உள்ளது என்றுஅவ்வறிக்கையில சுவாமி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications