27ல் காவிரி நதி நீர் ஆணைய கூட்டம்: வாஜ்பாய் நடவடிக்கை
டெல்லி:
பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான காவிரி நதி நீர் ஆணையத்தின் கூட்டம் வரும் 27ம் தேதி கூட்டப்பட்டுள்ளது.
காவிரியில் தமிழகத்துக்கு கர்நாடகவும் உரிய நீரைத் தர மறுத்ததையடுத்து ஆணையத்தையும், கண்காணிப்புக் குழுக்கூட்டத்தையும் புறக்கணிப்பதாக தமிழகம் அரசு அறிவித்தது. உடனடியாக நீரைத் திறந்துவிடுமாறு கர்நாடகத்துக்குஉத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் உடனடியாக காவிரிக் கண்காணிப்புரக் குழு கூடி இரு மாநில நீர் இருப்பை ஆராயஉத்தரவிட்டது. அதே போல இந்தக் கூட்டம் நடந்த ஒரு வாரத்தில் ஆணையத்தின கூட்டத்தையும் பிரதமர் கூட்ட வேண்டும் எனஉத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று கண்காணிப்புக் குழு கடந்த 9ம் தேதி கூடியது. அந்தக் கூட்டத்தில் தமிழகத்துக்குத் தண்ணீர்திறந்துவிட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஆனால், அதை கர்நாடகம் மீண்டும் ஏற்க மறுத்தது.
இந் நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி வரும் 27ம் தேதி நதி நீர் ஆணையத்தின் கூட்டத்தைக் கூட்ட பிரதமர் வாஜ்பாய் முடிவுசெய்துள்ளார்.
இது தொடர்பான சுற்றறிக்கையை இன்று தமிழக, கர்நாடக மற்றும் கேரள, பாண்டிச்சேரி முதல்வர்களுக்கு மத்திய அரசுஅனுப்பியது.
இன்று துணை ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள டெல்லி வந்த முதல்வர் ஜெயலலிதாவிடம் பிரதமர் வாஜ்பாய்இதனைத் தெரிவித்தார்.
இதையடுத்து இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து நிருபர்களிடம் பேசிய ஜெயலலிதா,
காவிர் நடுவர் மன்றத்தின் ஆணைப்படி தமிழகத்துக்கு உரிய நீரைத் தர கர்நாடகம் இன்னும் மறுத்து வருகிறது. கடும்மழையினால் கபினி அணையில் தேக்கி வைக்கப்பட்டுள்ள உபரி நீரைத் தான் தமிழகத்துக்கு திறந்துவிட்டு வருகிறது. தரவேண்டிய நீரை தர கர்நாடகம் தொடர்ந்து மறுக்கிறது என்றார்.












Click it and Unblock the Notifications