டெல்லியில் அப்துல் கலாம்- ஜெயலலிதா சந்திப்பு
டெல்லி:
டெல்லியில் ஜனாதிபதி அப்துல் கலாமை முதல்வர் ஜெயலலிதா நேரில் சந்தித்துப் பேசினார்.
துணை ஜனாதிபதி பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க டெல்லி சென்ற ஜெயலலிதா ஜனாதிபதி மாளிகைக்குச் சென்று அப்துல்கலாமைச் சந்தித்தார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய ஜெயலலிதா,
ஜனாதிபதியையும் துணை ஜனாதிபதியையும் தமிழகத்தில் நடக்கும் இரு முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்க அழைப்புவிடுத்துள்ளேன்.
இந்தியாவின் மிகப் பழமையான சென்னை மியூசியத்தின் 151வது ஆண்டு விழா வரும் ஜனவரி மாதம் நடக்கிறது. இதில்பங்கேற்க ஜனாதிபதி கலாமை அழைத்தேன். பங்கேற்பதாக உறுதியளித்தார்.
அதே போல பிப்ரவரி மாதம் சென்னை கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க துணைஜனாதிபதியை அழைத்தேன். அவரும் வருவதாகக் கூறியுள்ளார் என்றார் ஜெயலலிதா.
வீரப்பன் எப்போது பிடிபடுவான் என்று கேட்டபோது, இதற்குக் காலக்கெடு எல்லாம் தர முடியாது. அவன் பதுங்கியுள்ள காட்டுப்பகுதி மிக அடர்த்தியானது. 6 அடி தூரத்தில் ஒரு யானை நின்றிருந்தால் கூட தெரியாது. அந்த அளவுக்குக் காட்டுப் பகுதி மிகஅடர்த்தியாக உள்ளது.
அதிரடிப்படையினர் மிக நன்றாக செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் மிகத் தீவிரமான தேடுதல் வேட்டையில் உள்ளனர்என்றார்.












Click it and Unblock the Notifications