ரஷ்ய ஹெலிகாப்டரை வீழ்த்திய தீவிரவாதிகள்: 105 பேர் பலி
அச்கோய்-மர்த்தான் (ரஷ்யா):
ரஷ்யாவின் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்றை செசன்ய தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தியதில் அதில் பயணம் செய்த 105ராணுவ வீரர்கள் உடல் சிதறி இறந்தனர். மேலும் 33 பேர் பலத்த காயமடைந்தனர்.
எம்.ஐ.-26 ரகத்தைச் சேர்ந்த இந்த ஹெலிகாப்டர் தான் இதுவரை உலகில் தயாரிக்கப்பட்டஹெலிகாப்டர்களிலேயே பெரிதானது என்று கருதப்படுகிறது.
சுமார் 140 பேருடன் இந்த ஹெலிகாப்டர் செசன்யா பகுதியில் பறந்து கொண்டிருந்த போது திடீரென்று வெடித்துச்சிதறியது.
இதில் 105 ரஷ்ய ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். மற்ற அனைவருமே பலத்த காயமடைந்தனர்.
இதுவரை 23 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் காயமடைந்த 17 பேரும் மீட்கப்பட்டுள்ளனர்.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தான் ஹெலிகாப்டர் வெடித்துச் சிதறியுள்ளது என்று முதலில் கருதப்பட்டது.ஆனால் தாங்கள் தான் ஹெலிகாப்டரைச் சுட்டு வீழ்த்தியதாக செசன்ய தீவிரவாதிகள் தெரிவித்தனர்.
ஆனால் ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இதை மறுத்தார். ஹெலிகாப்டர்என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாகத் தான் இவ்விபத்து ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.
ஆனால் செசன்ய தீவிரவாதிகள் ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதை பின்னர் ரஷ்யா ஒப்புக் கொண்டு விட்டது.
இந்தச் சம்பவம் குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
செசன்ய தீவிரவாதிகளும் முஸ்லீம் தீவிரவாதிகள் தான். இவர்களுக்கும் சர்வதேசத் தீவிரவாதியான ஒசாமா பின்லேடனின் அல்-கொய்தாவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.
இதுவரை நடந்த போரில் இத்தனை ரஷ்ய வீரர்களை செசன்ய தீவிரவாதிகள் ஒரே நாளில் கொன்றுள்ளது இதுவேமுதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications