சந்திரிகாவின் அதிகார குறைப்புக்கு புலிகள் வரவேற்பு

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

அதிபர் சந்திரிகாவின் அதிகாரத்தைக் குறைக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே முடிவு செய்திருப்பதை விடுதலைப் புலிகள்வரவேற்றுள்ளனர். மேலும் வேகமாகச் செயல்பட்டு சந்திரிகாவின் அதிகாரங்களைப் பறிக்க வேண்டும் எனவும் ரணிலுக்கு புலிகள்கோரிக்கை விடுத்துள்ளனர்.

லண்டனில் இருந்து வெளியாகும் புலிகளின் பத்திரிக்கையான த கார்டியனில் வெளியாகியுள்ள செய்தி விவரம்:

7 மாத மனச் சலனத்துக்குப் பின் இப்போது தான் ரணில் விக்கிரமசிங்கே தனது அரசைப் பாதுகாக்கவும் அமைதிப் பேச்சுவார்த்தையைப்பாதுகாக்கவும் திடமான நடவடிக்கை எடுத்துள்ளார். இது மிகச் சிறந்த நடவடிக்கையாகும்.

சந்திரிகாவை வைத்துக் கொண்டு சிறந்த நிர்வாகத்தைத் தந்துவிட முடியும் என்ற தவறான நம்பிக்கையை இப்போதாவது ரணில்விக்கிரமசிங்கே கைவிட வேண்டும். இன்னும் வேகமாக செயல்பட்டு நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிபர் சந்திரிகாவின் அதிகாரத்தைஉடனடியாகப் பறிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அமைச்சரவை இன்று முக்கிய ஆலோசனை:

இந் நிலையில் அதிபர் சந்திரிகாவின் அதிகாரங்களைக் குறைக்கும் முக்கிய சட்டத் திருத்தம் குறித்து இன்று இலங்கை அமைச்சரவை விவாதிக்கிறது. குறிப்பாக ஓராண்டு காலத்தை நிறைவு செய்த நாடாளுமன்றத்தைக் கலைக்கும்அதிகாரத்தை அதிபரிடம் இருந்து பறிக்க இந்தச் சட்டத் திருத்தம் வகை செய்யும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+