உப்பளப் பணிப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவர் கைது
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் உப்பளத்தில் வேலை பார்த்து வந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 45 வயது நபரைபோலீஸார் கைது செய்தனர்.
தூத்துக்குடி கால்ட்வெல் காலனிப் பகுதியைச் சேர்ந்தவர் தனபால். இவர் கோழிக் கடை வைத்துள்ளார்.
இவரது கடையில் தேங்கும் கோழிக் கழிவுகளை, பிரையன்ட் நகரில் உள்ள ஒரு உப்பளத்தில் வேலை பார்த்துவந்த 21 வயதுப் பெண் தினசரி வந்து வாங்கிச் செல்வது வழக்கம்.
வழக்கம் போல தனபாலின் வீட்டுக்கு வந்த அந்தப் பெண் கோழிக் கழிவுகளை வாங்கியபோது அந்தப் பெண்ணைகட்டாயப்படுத்தி தனபால் பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அப்பெண் போலீஸில் புகார் கொடுக்கவே போலீஸார் தனபாலைக் கைது செய்தனர். போலீஸார் தீவிரவிசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications