அண்ணா சாலையில் கண்ணகிக்கு சிலை: கருணாநிதி முடிவு
திருவள்ளூர்:
சென்னையில் அண்ணா சாலையில் கண்ணகிக்கு சிலை வைக்க திமுக முடிவு செய்துள்ளது.
திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்துக்கும் அங்கிருந்து சிறிது தொலைவில் உள்ள திமுக இளைஞரணியின் தலைமையகமானஅன்பகத்துகும் இடையில் உள்ள ரவுண்டானாவில் இந்த சிலை வைக்கப்படவுள்ளது.
கடற்கரையில் இருந்த கண்ணகி சிலையை ஓட்டை காரணங்களைக் கூறி தமிழக அரசு நீக்கியது. ஜெயலலிதாவின் ஜோதிடர் இதைஅபசகுணம் என்று கூறியதால் தான் சிலை அகற்றப்பட்டதாக எதிர்க் கட்சிகள் கூறியுள்ளன. இந்தச் சிலையை மீண்டும் நிறுவக் கோரும்வழக்கு விசாரணையில் உள்ளது.
இந் நிலையில் தமிழகம் முழுவதும் கண்ணகி சிலைகளை வைக்குமாறு திமுகவினருக்கு கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். திமுக பொதுக்கூட்டங்களிலும் கண்ணகி சிலையை வைக்க உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே சென்னையில் ஜெயலலிதா அடிக்கடி சென்று வரும் அண்ணா சாலையிலேயே கண்ணகி சிலையை வைக்க கருணாநிதிமுடிவு செய்துள்ளார். இந்தச் சிலையை செய்யும் பணி மீஞ்சூரில் நடந்து வருகிறது.
சிற்பி தீனதயாளன் இதனை செய்து வருகிறார். இந்தச் சிலையை கருணாநிதி நேரில் சென்று பார்வையிட்டார். சில மாற்றங்களையும்செய்யுமாறு உத்தரவிட்டார்.
இந்தச் சிலையை அடுத்த மாதம் நடக்கும் திமுக முப்பெரும் விழாவின்போது நிறுவ கருணாநிதி திட்டமிட்டுள்ளார். ஆனால், இதற்கு தமிழகஅரசு அனுமதி தருமா என்று தெரியவில்லை.












Click it and Unblock the Notifications