சிலையிடம் மனு தந்த வழக்கறிஞர்கள்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நீதிமன்றக் கட்டண விவகாரம் தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா தங்களை சந்திக்க மறுத்ததால் மனு நீதிச் சோழனின் சிலையிடம் மனுகொடுத்தனர் வழக்கறிஞர்கள்.
நீதிமன்றக் கட்டண உயர்வை எதிர்த்து மூன்றாவது நாளாக இன்றும் தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவைச் சந்திக்க வழக்கறிஞர்கள் அனுமதி கோரியிருந்தனர்.
ஆனால், வழக்கறிஞர்களை முதல்வர் சந்திப்பதில்லை என்று அரசுத் தரப்பில் பதில் தரப்பட்டதாகத் தெரிகிறது.
இதையடுத்து சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மனு நீதிச் சோழனின் சிலையிடம் வழக்கறிஞர்கள் தங்கள் கோரிக்கை மனுவைத்தந்தனர்.












Click it and Unblock the Notifications