அரசு கல்லூரி ஆசிரியர்களுடன் ஜெ. இன்று பேச்சு
சென்னை:
அரசுக் கல்லூரி ஆசிரியர் சங்க பிரதிநதிகள் இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் முதல்வர் ஜெயலலிதாவுடன்பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
அரசுக் கல்லூரிகளை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களுடன் இணைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக சட்ட மசோதா ஒன்றும் கொண்டு வரப்பட்டுள்ளது.
தமிழக அரசு இந்த முடிவை வாபஸ் பெற வேண்டும் என்று கோரி அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் காலவரையற்றவேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆசிரியர்களுக்கு ஆதரவாக மாணவ-மாணவியரும் போராடி வருகிறார்கள். இதனால் அரசுக் கல்லூரிகள் மற்றும்விடுதிகள் மூடப்பட்டுள்ளன. வகுப்புகளும் நடைபெறவில்லை.
இந்த நிலையில் பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளுக்கு ஜெயலலிதா அழைப்பு விடுத்தார்.அதை ஏற்றுக் கொண்ட ஆசிரியர் சங்கப் பிரதிநதிகள் இன்று பிற்பகல் முதல்வரைச் சந்திக்கிறார்கள்.
இருப்பினும், அரசுக் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களுடன் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்றுமட்டுமே முதல்வரிடம் சொல்லப் போவதாக ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு ஜெயலலிதா சம்மதிக்காவிட்டால் போராட்டம் தொடரும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications