திருவண்ணாமலை: கொலை வழக்கில் 4 பேருக்கு தூக்கு
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருகே கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
திருவண்ணாமலை அருகே உள்ளது கல்நாட்டூர். இந்த ஊரைச் சேர்ந்த கண்ணன், மணி, பிச்சைக்காரன் மற்றும்பூங்காவனம் ஆகிய நான்கு பேரையும் ராயப்பன் என்பவரது தலைமையிலான கும்பல் நிலத்தகராறு தொடர்பாககடந்த 1997ல் கொடூரமாக வெட்டி, எரித்துப் படுகொலை செய்தது.
இந்தக் கொலை தொடர்பாக ராயப்பன், அந்தோணி, சின்னத்துரை உள்ளிட்ட ஒன்பது பேர் கைதுசெய்யப்பட்டனர்.
இவர்கள் மீதான வழக்கு திருவண்ணாமலை நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
விசாரணையின் இறுதியில் சின்னத்துரை, செல்வம், குழந்தை ஏசு, ஆபிரகாம் ஆகிய நான்கு பேருக்கும்தூக்குத்தண்டனை விதித்தும், மற்றவர்களுக்கு விடுதலை அளித்தும் நீதிபதி செல்வக்குமார் தீர்ப்பளித்தார்.
இந்தக் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளி ராயப்பன் மற்றும் பிலிப்ஸ் ஆகியோர் ஏற்கனவே இறந்து விட்டனர்என்பது குறிப்பிடத்தக்கது.