தூத்துக்குடி காங். அலுவலகம் மீது அதிமுகவினர் தாக்குதல்
நாகர்கோவில்:
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் காங்கிரஸ்- அதிமுக தொண்டர்களிடையே தொடர்ந்து வருகிறது.
காங்கிரஸ் தலைவர் சோனியாவைப் பற்றி முதல்வர் ஜெயலலிதா தாறுமாறாக பேட்டியளித்ததைத் தொடர்ந்துஜெயலலிதாவின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன. இதற்குப் போட்டியாக அதிமுகவினர் சோனியாவின்கொடும்பாவியை எரித்தனர்.
சில இடங்களில் இந்தப் போட்டி கொடும்பாவி எரிப்புகள் மோதலில் முடிந்துள்ளன.
காங் அலுவலகம் மீது தாக்குதல்:
தூத்துக்குடியில் ஜெயலலிதாவின் கொடும்பாவியை எரித்ததைத் தொடர்ந்து அதிமுகவினர் காங்கிரஸ் கட்சியின்அலுவலகத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர்.
இதில் பல்வேறு காங்கிரஸ் தொண்டர்கள் படுகாயமடைந்தனர். இச் சம்பவம் தொடர்பாக 15 அதிமுகவினரைக்கைது செய்த போலீசார் பல காங்கிரஸ் தொண்டர்களையும் கைது செய்துள்ளனர்.
தாக்குதல் நடத்தியவர்களை விட்டுவிட்டு தாக்கப்பட்டவர்கள் மீதும் போலீசார் நடவடிக்கை எடுத்திருப்பதற்குகாங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் இளங்கோவன கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் தாக்கப்பட்ட காங்கிரஸ் அலுவலகத்தைப் பார்வையிட்ட அவர், இனிமேல் அதிமுகவுடன்கூட்டணியே கிடையாது என்றார்.
ஜெ. ராஜினாமா செய்ய வேண்டும்:
அடுத்து நாகர்கோவிலில் நிருபர்களிடம் பேசிய அவர்,
வீரப்பனைப் பிடிக்க முடியாத ஜெயலலிதா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். வீரப்பனைப் பிடிக்கமுடியாத கருணாநிதி ராஜினாமா செய்ய வேண்டும் என்று இதே ஜெயலலிதா தான் முன்பு சொன்னார். அவரதுபேச்சு இப்போது அவருக்கே பொறுந்தும்.
தமிழகத்தில் போலீசாரை அரசு தவறான வகையில் பயன்படுத்தி வருகிறது. மாநில சட்டம் ஒழுங்கு நாறிவிட்டதுஎன்றார்.
நன்றி மறந்த ஜெ.:
இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை எம்.பியும் அக்கட்சியின் மனித உரிமைப் பிரிவின் தலைவருமான சுதர்சன நாச்சியப்பன், காங்கிரஸ் ஆதரவுடன் வென்றஜெயலலிதா இப்போது நன்றி மறந்துவிட்டார் என்றார்.
இதற்கிடையே பொள்ளாச்சி அருகேஜெயலலிதாவின் கொடும்பாவியை எரித்த 70 காங்கிரஸ் தொண்டர்கள்இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
அடுத்த ரவுண்டு ஆரம்பம்.. வெயிலுக்கு பிரேக் தரும் மழை.. 2 ஆம் தேதி வரை கொளுத்த போகுது! வானிலை மையம் -
எம்.எல்.ஏ பதவியா? மேயர் நாற்காலியா? ஆட்சிக்கு வந்ததுமே ஸ்டாலினுக்கு ‘செக்’ வைத்த ஜெயலலிதா -
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க












Click it and Unblock the Notifications