வீரப்பனுக்காக செலவழிப்பது வீண்: ராமதாஸ்
வேலூர்:
வீரப்பனைப் பிடிப்பதற்காக இதுவரை ரூ.500 கோடி வரை செலவிட்டுள்ளார்கள். அதற்குப் பதில் வளர்ச்சித்திட்டங்களுக்காக இனிமேலாவது செலவிட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ்கூறியுள்ளார்.
வேலூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
கடந்த 10 ஆண்டுகளில் வீரப்பனைப் பிடிக்கப் போவதாகக் கூறி ரூ.500 கோடி வரை செலவிடப்பட்டுள்ளது.இந்தப் பணத்தை வளர்ச்சித் திட்டங்களுக்காக செலவிட்டிருக்கலாம்.
இனிமேலாவது வீரப்பனைப் பிடிப்பதற்காக வீணாக செலவழிப்பதை விட்டுவிட்டு, வளர்ச்சித் திட்டப் பணிகளுக்குஅந்தப் பணத்தை பயன்படுத்த வேண்டும்.
வீரப்பனுக்குப் பொது மன்னிப்பு கொடுப்பதே சரியானது. அப்போது தான் இரு மாநில அரசுகளுக்கும் பெரும்நிம்மதி கிடைக்கும். ஏற்கனவே இதே கருத்தைப் பல தலைவர்களும் கூறி விட்டனர்.
நாகப்பா கடத்தல் விவகாரத்தில் திமுக தலைவர் கருணாநிதியை சம்பந்தப்படுத்தி முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளதுவிஷமத்தனமானது.
மேலும் வீரப்பனுடன் முன்னாள் திமுக அமைச்சரான துரைமுருகனுக்குத் தொடர்பு உள்ளதாகவும் கூறி வன்னியர்சமூகத்தையே அவர் கேவலப்படுத்தியுள்ளார். ஆனால் இந்த அபத்தமான கருத்தையெல்லாம் மக்கள் நம்பமாட்டார்கள்.
நாகப்பா விவகாரத்தில் கர்நாடக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கையை நான் வரவேற்கிறேன். ஆனால்ஜெயலலிதாவோ பிரச்சினைகளைத் திசை திருப்பும் வகையிலேயே செயல்பட்டு வருகிறார் என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications