For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஈரோட்டில் தொழிற்சாலை கட்டிடம் இடிந்து விழுந்து 5 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

ஈரோடு:

ஈரோட்டில் தொழிற்சாலை கட்டடம் கட்டும்போது அது இடிந்து விழுந்து 2 பெண்கள் உள்பட 5 பேர் பரிதாபமாகபலியானார்கள்.

ஈரோடு அருகே கிருஷ்ணம்பாளையம் என்ற இடத்தில் புதிதாக ஒரு தொழிற்சாலை கட்டப்பட்டு வருகிறது.

கட்டுமானப் பணி நடந்து கொண்டிருக்கும் போது, திடீரென்று அந்தக் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்தது. அப்போதுஅங்கு 20 பேர் வரை வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

கட்டிடம் இடிந்து விழுந்ததும் தொழிலாளர்கள் அனைவரும் பதறி அடித்து சிதறி ஓடினர். ஆனால் இந்திரா, லட்சுமிஆகிய இரண்டு பெண்களும் மணியன், முத்துச்சாமி மற்றும் ஒருவர் ஆகிய ஐந்து பேரும் இடிபாடுகளில் சிக்கிபலியாயினர்.

காயமடைந்த மற்றவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்குத் தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தச் சம்பவம் குறித்து ஈரோடு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசு உதவி:

இதற்கிடையே சம்பவம் நடந்த இடத்தை தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் ராமசாமி நேரில் சென்றுபார்வையிட்டார்.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு அவர் ஆறுதல் கூறினார்.

மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25,000 வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாகவும்ராமசாமி தெரிவித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X