ஒகேனக்கல் நீர் வீழ்ச்சியில் "ஜட்டி" குளியல், மசாஜுக்கு தடை
ஒகேனக்கல்:
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் ஜட்டியுடன் குளிப்பது, எல்லோரும் பார்க்கும் வகையில்,உடம்பை முறுக்கி, வளைத்து, நெளித்து மசாஜ் செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றாலம் நீர்வீழ்ச்சிக்குப் பிறகு தமிழகத்தில் பிரபலமானது ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி. இங்கு தான் காவி ஆறுதமிழகத்திற்குள் நுழைகிறது.
ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் பிரபலமானது பிரஷ்ஷாக மீன் பிடித்து வறுத்துச் சாப்பிடுதல், மசாஜ் செய்தல், படகு சவாரி ஆகியவை தான்.
இந்தப் பகுதியை அழகாக வைத்திருக்கவும், அதிக சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கவும் சுற்றுலாத்துறை சிலமுக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. இதுதொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் தர்மபுரி மாவட்ட கலெக்டர் சித்திக் தலைமையில் சமீபத்தில் நடந்தது.
அதன்படி, பொதுமக்கள் பார்வையில் படும்படி இனிமேல் மசாஜ் செய்யத் தடை விதிக்கப்படுகிறது. அதற்கெனமறைவான இடம் ஒதுக்கப்படும். அங்கு தான் போய் உடம்பை முறுக்கேற்றிக் கொள்ள வேண்டும்.
அதேபோல அருவியில் ஜட்டியுடன் குளிக்கக் கூடாது. துண்டு கட்டிக் கொண்டு அல்லது வேறு ஏதாவதுஆடையுடன் தான் குளிக்க வேண்டும்.
இதை மீறி பெண்களை கூச வைக்கும் அளவுக்கு அரை நிர்வாணம், முக்கால் நிர்வாண கோலத்தில் யாரேனும்குளித்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
குற்றாலத்தில் சமீபத்தில் பெண்கள் பகுதியில் ஒரு ஆண் நைட்டி அணிந்து கொண்டு குளித்து போலீஸாரிடம்மாட்டிக் கொண்டது நினைவிருக்கலாம்.