ஜெ.வைச் சந்திக்கிறார் நாகப்பாவின் மனைவி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வீரப்பனால் கடத்தப்பட்ட கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவின் மனைவி பரிமளா விரைவில் தமிழகமுதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து தனது கணவரை மீட்க உதவுமாறு கோரவுள்ளார்.

நாகப்பாவை வீரப்பன் கடத்திச் சென்று ஒரு வாரமாகி விட்டது. அவரை மீட்பதற்காக கர்நாடக மற்றும் தமிழகஅரசுகள் தீவிரமாக முயன்று வருகின்றன.

தமிழக அரசுத் தரப்பில் தூதர் யாரையும் அனுப்ப மாட்டோம் என்று ஜெயலலிதா திட்டவட்டமாக கூறி விட்டார்.ஆனாடல் கர்நாடக அரசுத் தரப்பில் யாரைத் தூதராக அனுப்புவது என்பது குறித்து தீவிரமாகப் பரிசீலிக்கப்பட்டுவருகிறது.

கர்நாடக அதிரடிப்படை தற்போது தேடுதல் வேட்டையை நிறுத்தி விட்டது. ஆனால் தமிழக அதிரடிப்படை வீரர்கள்தொடர்ந்து தேடுதல் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் நாகப்பாவை மீட்க ஜெயலலிதா உதவ வேண்டும் என்று நாகப்பாவின் மனைவி கூறியுள்ளார். இதுதொடர்பாக ஜெயலலிதாவை

விரைவில் நேரில் சந்தித்து பேசவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

இதற்கிடையே வீரப்பனைத் தேடி தமிழக அதிரடிப்படையினர் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து சென்று காட்டுக்குள்தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+