செய்யாறு பட்டாசுக் கடையில் பயங்கர தீ: 8 பேர் பலி
செய்யாறு:
செய்யாறில் உள்ள ஒரு பட்டாசுக் கடையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்து காரணமாக 8 பேர் பரிதாபமாக உடல் கருகிஉயிரிழந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு-சந்தைமேட்டில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் சலாம் (60) என்பவர்பட்டாசுக் கடை ஒன்றை வைத்துள்ளார்.
இந்தக் கடையில் நேற்று பிற்பகல் சுமார் 2 மணிக்குத் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவியதில்கடையில் உள்ள பட்டாசுகள் அனைத்தும் பயங்கரமாக வெடித்துச் சிதறின.
இதனால் கடையில் உள்ள இடிபாடுகளுக்குள் சிக்கி சலாம், பாஷா (45), கலிமுல்லா (60), கோபால் (32) ஆகியநான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்தத் தீவிபத்தில் காயமடைந்த ராதா (32), சங்கர் (18), கருணாகரன் (38), பாபு (30), வெங்கடேசன் (30),வெங்கடேசன் (18) ஆகியோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இவர்களில் ராதா, சங்கர் உள்பட மேலும் நான்கு பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர். மற்ற இருவரும்மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இந்தப் பயங்கரமான தீவிபத்தில் பட்டாசுக் கடை தவிர மேலும் ஐந்து கடைகளும் சேதமாகின. செய்யாறு போலீசார்இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே இவ்விபத்தில் பலியான எட்டு பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.50 ஆயிரம் உதவித் தொகைவழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.