போலீஸ் உதவியுடன் வலம் வரும் கள்ளச் சாராயம்: பெண்கள் சாலை மறியல்
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள மேல் செவலப்பாடி என்ற கிராமத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிக்கக்கோரி கிராமத்து பெண்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
மேல் செவலப்பாடி கிராமத்தில் கள்ளச் சாராய புழக்கம் அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் இந்தப் பகுதிகாவல் நிலையம் தான். நல்ல மாமூல் கிடைப்பதால் கள்ளச் சாராயம் காய்ச்சுவோருக்கு காவல் நிலையம் முழுபாதுகாப்பு வழங்கி வருகிறது.
இதை ஒழிக்க கிராமத்துப் பெண்களே பல முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் போலீஸ் உதவிகிடைக்காததால் ஏதும் செய்ய முடியவில்லை.
இதைத் தொடர்ந்து அரசுக்கும் போலீசுக்கும் தங்களது எதிர்ப்பை காட்ட சாலை மறியல் போராட்டத்தில்ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் சாலைப் போக்குவரத்து 3 மணி நேரம் பாதிக்கப்பட்டது.
அதிகாரிகள் விரைந்து வந்து சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். போலீசாருக்கு எதிராகவும் கள்ளச்சாராயத்துக்கு எதிராகவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்னரே பெண்கள் தங்களது போராட்டத்தைவாபஸ் பெற்றனர்.












Click it and Unblock the Notifications