டாக்டர் பட்டம் பெற்றார் கலாமின் கார் டிரைவர்
சென்னை:
குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் முன்னாள் கார் டிரைவர் கதிரேசன், வரலாற்றுப் பாடத்தில் ஆய்வு செய்துடாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.
கோவில்பட்டியைச் சேர்ந்தவர் கதிரேசன். அப்துல்கலாம் டி.ஆர்.டி.ஓவில் திட்ட இயக்குனராக இருந்தபோது,அவரிடம் கார் டிரைவராகவும், தனி உதவியாளராகவும் பணியாற்றியவர் கதிரேசன். 1986ம் ஆண்டு முதல் 1993ம்ஆண்டு வரை அவர் இந்தப் பணியில் இருந்தார்.
வெறும் பத்தாவது வகுப்பு மட்டுமே படித்திருந்த கதிரேசனை, சும்மா இருக்கும் நேரத்தில் எல்லாம் மேலும்படிக்குமாறு கலாம் தூண்டிக் கொண்டே இருந்தார். இதன் விளைவாக படிக்க ஆரம்பித்த கதிரேசன், வரலாற்றில்எம்.ஏ பட்டம் பெற்றார்.
இதுதவிர எம்.எட், மற்றும் எம்.பில் ஆகிய பட்டங்களையும் வென்றார். இதன் பின்னர் வரலாற்றுப் பாடத்தில்பி.எச்.டியை ஆரம்பித்தார்.
18 வருட பாதுகாப்புத் துறை சேவைக்குப் பின் சமீபத்தில் பணியிலிருந்து ஓய்வு பெற்றார் கதிரேசன். ஓய்வு பெற்றுவீட்டில் ஈசிசேரில் சாய்ந்துவிடாதே என்று கூறி அவரை அனைவருக்கும் கல்வி என்ற மத்திய அரசின் திட்டத்தில்,பயிற்சி அதிகாரியாகவும் ஆக்கினார் கலாம்.
சமீபத்தில தனது வரலாற்று ஆய்வுப் படிப்பை முடித்தார் கதிரேசன். சில தினங்களுக்கு முன் நெல்லைமனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் இவரது ஆராய்ச்சியை ஏற்று டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.
ஒரு கார் டிரைவர் வரலாற்றில் ஆராய்ச்சி செய்து டாக்டராகி புதிய வரலாறு படைத்துள்ளார்.
எனது இந்தச் சாதனைக்கு டாக்டர் கலாம்தான் முழுக்க முழுக்கக் காரணம் என்று கண்களில் நீர் பணிக்கச்சொல்கிறார் டாக்டர் கதிரேசன்.