படிக்க வசதியில்லாததால் மாணவன் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை அருகே பெரம்பூரில் பாலிடெக்னிக் படிக்க வசதி இல்லாததால் மனம் உடைந்த மாணவன் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
பெரம்பூர் அகரம் பகுதியைச் சேர்ந்தவர் நூர். இவரது மகன் சயீத் அகமது. நூர் மாநகராட்சியில் கடை நிலை ஊழியராக பணியாற்றிவருகிறார். வசதியில்லாவிட்டாலும் கஷ்டப்பட்டு தனது மகனைப் பிளஸ் டூ வரை படிக்க வைத்தார்.
வறுமையில் வாடினாலும் சயீத் அகமதுவுக்கு பாலிடெக்னிக்கில் சேர்ந்து படிக்க ஆசைப்பட்டார். தனது ஆர்வத்தை பெற்றோரிடம்கூறியுள்ளார். ஆனால் மேற்கொண்டு படிக்க வைக்க வசதியில்லை, எனவே வேலைக்குப் போ என்று வீட்டில் கூறியுள்ளனர்.
இதனால் மனம் உடைந்தார் சயீத் அகமது தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.












Click it and Unblock the Notifications