For Daily Alerts
Just In
ஆசிரியர் தினம்: 352 பேருக்கு நல்லாசிரியர் விருது
சென்னை:
இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழகத்தைச் சேர்ந்த 352 ஆசிரிய, ஆசிரியைகளுக்குமாநில அரசின் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. குடியரசுத் தலைவராகஇருந்த எஸ்.ராதாகிருஷ்ணனின் பிறந்த நாள்தான் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்த தினத்தில் நாடு முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரிய, ஆசிரியைகளுக்கு தேசிய நல்லாசிரியர்விருதை மத்திய அரசு வழங்குகிறது. மாநில அரசும் நல்லாசிரியர் விருதை வழங்குகிறது.
தமிழகத்தில் இந்த ஆண்டு 352 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.
சென்னையில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியின்போது மாநில கல்வித்துறை அமைச்சர் தம்பித்துரை இந்தவிருதுகளை வழங்குகிறார்.
Comments
Story first published: Thursday, September 5, 2002, 5:30 [IST]