For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்துக்கு நீர் தந்ததை எதிர்த்து ரயில் மறியல்

By Staff
Google Oneindia Tamil News

மாண்டியா:

தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதை எதிர்த்து மாண்டியாவில் விவசாயிகளும் மாணவர்களும் ரயில் மறியல் மற்றும் சாலைமறியல் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் மைசூர்- பெங்களூர் இடையிலான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மைசூர்- பெங்களூர் ரயிலுலையும் மாண்டியாவில் இவர்கள் தடுத்து நிறுத்தினர்.

நாளை முதல் இந்தப் போராட்டம் தீவிரமாக உள்ளது. நாளை மாண்டியா மாவட்டம் முழுவதும் பந்த் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும்உண்ணாவிரதரப் போராட்டம் நடத்தவும், 8ம் தேதி முழு அளவில் ரயில் மறியல் போராட்டம் நடத்தவும் விவசாய சங்கத்தினரும் பல்வேறுஅரசியல் கட்சிகளும் திட்டமிட்டுள்ளன.

மேலும் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கட்டையும் முற்றுகையிடவும் நீர் திறந்துவிடப் படுவதைத் தடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவிவசாய சங்கத்தின் தலைவர் மாடே கெளடா கூறியுள்ளார். மேலும் சுப்ரீம்கோர்ட்டின் உத்தரவை முதல்வர் மீற வேண்டும் என்றும்தேவைப்பட்டால் பதவி விலக வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இந்த மாவட்டத்தில் போராட்டங்களை இவர் தான் முன்னின்று நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாவட்டத்திலும் தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் வசித்து வருகின்றனர். விவசாய சங்கத்தின் மிரட்டலும் அரசியல் கட்சிகள்,மாணவர்களின் போராட்டமும் இவர்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X