திருச்சி: திமுக பயங்கர கோஷ்டி மோதல்- 5 பேருக்கு அரிவாள் வெட்டு
திருச்சி:
திருச்சியில் திமுகவினரின் இரு கோஷ்டிகள் இடையே நடந்த பயங்கர மோதலில் 5 பேருக்கு அரிவாள் வெட்டுவிழுந்தது. இதுதொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி அருகே உள்ளது கம்பரசன்பேட்டை. இந்த ஊரின் பஞ்சாயத்துத் தலைவர் குடமுருட்டி சேகர் தலைமையில்திமுக தேர்தல் ஆலோசனைக் குழுக் கூட்டம் நடந்தது.
அப்போது அங்கு முன்னாள் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையிலான ஒரு கோஷ்டி வந்தது. அவர்களும்திமுகவினர்தான்.
ஆலோசனைக் குழுக் கூட்டத்தை ரத்து செய்யுமாறு ரவிச்சந்திரன் கோஷ்டி கூறியது. ஆனால், அதை ஏற்க சேகர்கோஷ்டி மறுத்தது. இதையடுத்து இருதரப்பினருக்கும் இடையே பெரும் மோதல் மூண்டது.
கத்தி, அரிவாள்களால் இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர். கற்களும் நாற்காலிகளும் பறந்தன. இருதரப்பினரும் வேட்டிகளை உருவி விட்டு அடித்துக் கொண்டனர்.
இதில் சேகர் கோஷ்டியைச் சேர்ந்த 5 பேருக்கு உடலில் பல இடங்களில் வெட்டு விழுந்தது.
இந்தச் சம்பவம் தொடர்பாக 5 பெண்கள் உள்பட 10 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் நடந்தஇடம் வன்முறை நடந்த பகுதி மாதிரி காணப்பட்டது.
சின்னஞ்சிறிய ஊரில் நடந்த இந்த பயங்கர மோதல் அங்கு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கோஷ்டியில் ரவிச்சந்திரன் கோஷ்டி அழகிரி ஆதரவு கொண்டது என்று தெரிகிறது. சேகர் கோஷ்டிஸ்டாலினை ஆதரித்து வருகிறது.












Click it and Unblock the Notifications