ஸ்டாலினும் கோவா சென்றார்
சென்னை:
கோவாவில் ஓய்வில் இருக்கும் திமுக தலைவர் கருணாநிதியுடன் சேர்ந்து தங்க அவரது மகனும், முன்னாள்சென்னை மேயருமான மு.க.ஸ்டாலினும் தனது குடும்பத்தினருடன் கோவா புறப்பட்டுச் சென்றார். புதன்கிழமையேஅவர் கோவா சென்றுவிட்டார்.
கோவாவில் கருணாநிதி தற்போது ஓய்வெடுத்து வருகிறார். அவருடன் அவரது மனைவி தயாளு அம்மாள், டாக்டர்கோபால் மற்றும் முன்னாள் அமைச்சர் துரைருகன் ஆகியோரும் தங்கியுள்ளனர்.
இந் நிலையில் ஸ்டாலின் அவரது மனைவி துர்கா மற்றும் குடும்பத்தினரும் கோவா புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
முதலில் பெங்களூரில் தனது மகள் வீட்டில் தங்கியிருந்து தொல்காப்பியத்துக்கு உரை எழுத கருணாநிதிதிட்டமிட்டிருந்தார். ஆனால், காவிரி, வீரப்பன் விவகாரத்தால் பெங்களூர் பயணத்தை ரத்து செய்துவிட்டு கோவாசென்றார்.
ஆனால், வீரப்பனை ரகசியமாக சந்திக்கவே கருணாநிதி கோவா சென்றதாக அறிக்கை வெளியிட்டு ஜெயலலிதாபரபரப்பை ஏற்படுத்தினார் என்பது நினைவுகூறத்தக்கது.
கருணாநிதிக்கு டென்சன் தருவதற்காக மேம்பால ஊழல் வழக்கு குறித்து விசாரித்து வரும் முகமது அலி மற்றும்சி.பி.சி.ஐ.டி. போலீசாரையும் கோவாவிலேயே முற்றுகையிட வைத்துள்ளது தமிழக அரசு என்பதுகுறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் கருணாநிதி நாளை சென்னை திரும்புகிறார். ஆகஸ்ட் 30ம் தேதி கருணாநிதி அங்கு சென்றார்.












Click it and Unblock the Notifications