Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புலிகள்: தடை நீக்கத்துக்கு தமிழர் கட்சிகள், அமெரிக்கா ஆதரவு

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

விடுதலைப் புலிகள் மீதான தடையை இலங்கை அரசு நீக்கியதை பெரும்பாலான தமிழர் கட்சிகள் வரவேற்றுள்ளன. அமெரிக்காவும் இந்ததடை நீக்கத்தை வரவேற்றுள்ளது.

புலிகளும் இன்று தான் தடை நீக்கத்தை அதிகாரப்பூர்வமாக வரவேற்றுள்ளனர்.

ஆனால், ஜனதா விமுக்தி பெரமுனா இந்தத் தடை நீக்கத்தை கடுமையாக எதிர்த்துள்ளது.

4 முக்கிய தமிழ் கட்சிகள் அடங்கிய தமிழ் தேசியக் கூட்டணி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தத் தடை நீக்கத்தை நாங்கள் முழுமனதோடு ஆதரிக்கிறோம். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயின் அமைதி முயற்சிகளுக்கு அதிபர் சந்திரிகா முழு ஆதரவு தரவேண்டும்.

அதில் முட்டுக்கட்டை போட சந்திரிகாவுக்கு எந்த உரிமையும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. ஜனதா விமுக்தி பெரமுனாபோன்ற இனவாத அமைப்புகளின் பேச்சைக் கேட்டுக் கொண்டு அமைதி முயற்சியை சந்திரிகா கெடுக்கக் கூடாது என்று அதில்கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் செயலாலர் சம்பந்தன் கையெழுத்திட்டுள்ளார்.

லண்டணில் பி.பி.சிக்கு பேட்டியளித்த புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர், இந்தத் தடை நீக்கத்தின் மூலம் மிகப் பெரியமுட்டிக்கட்டை நீங்கிவிட்டதாகக் கூறினார்.

பெரமுனா எதிர்ப்பு:

இதற்கிடையே இந்தத் தடை நீக்கத்தை எதிர்த்து தெருக்களில் இறங்கி போராடப் போவதாக சிங்கள இனவாத அமைப்பானஜனதா விமுக்தி பெரமுனா மிரட்டியுள்ளது.

அதிபர் சந்திரிக தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி புலிகள் மீது மீண்டும் தடையை அமலாக்க வேண்டும் எனவும், புலிகளின்வரி வசூல் போன்ற சட்ட விரோத செயல்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது.

அமெரிக்கா ஆதரவு:

ஆனால், புலிகள் மீதான தடையை இலங்கை அரசு நீக்கியதை அமெரிக்கா வரவேற்றுள்ளது. அதே நேரத்தில் அமெரிக்காவில்புலிகள் மீதான தடை தொடரும் என அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்கத் தூதரகம் கொழும்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தீவிரவாதத்தை புலிகள் முழுவதுமாககைவிடும் வரை அமெரிக்காவின் தடை நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியாவிலும் தடை தொடரும்:

புலிகள் மீதான தடையை நீக்கப் போவதில்லை என இந்தியா தெரிவித்துவிட்டது. அதே போல பிரிட்டனும் தடையை நீக்கமாட்டோம் என அறிவித்துள்ளது.

பேச்சுவார்த்தைக்கு இடம் தேர்வு:

இதற்கிடையே தாய்லாந்தில் பேச்சு நடத்தப்படும் இடத்தை புலிகளும் இலங்கை அரசும் முடிவு செய்துவிட்டன. தாய்லாந்துநாட்டின் யோசனைப்படி அந் நாட்டில் உள்ள சத்தாஹிப் என்ற இடத்தில் இந்தப் பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+