புலிகள்: தடை நீக்கத்துக்கு தமிழர் கட்சிகள், அமெரிக்கா ஆதரவு
கொழும்பு:
விடுதலைப் புலிகள் மீதான தடையை இலங்கை அரசு நீக்கியதை பெரும்பாலான தமிழர் கட்சிகள் வரவேற்றுள்ளன. அமெரிக்காவும் இந்ததடை நீக்கத்தை வரவேற்றுள்ளது.
புலிகளும் இன்று தான் தடை நீக்கத்தை அதிகாரப்பூர்வமாக வரவேற்றுள்ளனர்.
ஆனால், ஜனதா விமுக்தி பெரமுனா இந்தத் தடை நீக்கத்தை கடுமையாக எதிர்த்துள்ளது.
4 முக்கிய தமிழ் கட்சிகள் அடங்கிய தமிழ் தேசியக் கூட்டணி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தத் தடை நீக்கத்தை நாங்கள் முழுமனதோடு ஆதரிக்கிறோம். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயின் அமைதி முயற்சிகளுக்கு அதிபர் சந்திரிகா முழு ஆதரவு தரவேண்டும்.
அதில் முட்டுக்கட்டை போட சந்திரிகாவுக்கு எந்த உரிமையும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. ஜனதா விமுக்தி பெரமுனாபோன்ற இனவாத அமைப்புகளின் பேச்சைக் கேட்டுக் கொண்டு அமைதி முயற்சியை சந்திரிகா கெடுக்கக் கூடாது என்று அதில்கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் செயலாலர் சம்பந்தன் கையெழுத்திட்டுள்ளார்.
லண்டணில் பி.பி.சிக்கு பேட்டியளித்த புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர், இந்தத் தடை நீக்கத்தின் மூலம் மிகப் பெரியமுட்டிக்கட்டை நீங்கிவிட்டதாகக் கூறினார்.
பெரமுனா எதிர்ப்பு:
இதற்கிடையே இந்தத் தடை நீக்கத்தை எதிர்த்து தெருக்களில் இறங்கி போராடப் போவதாக சிங்கள இனவாத அமைப்பானஜனதா விமுக்தி பெரமுனா மிரட்டியுள்ளது.
அதிபர் சந்திரிக தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி புலிகள் மீது மீண்டும் தடையை அமலாக்க வேண்டும் எனவும், புலிகளின்வரி வசூல் போன்ற சட்ட விரோத செயல்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது.
அமெரிக்கா ஆதரவு:
ஆனால், புலிகள் மீதான தடையை இலங்கை அரசு நீக்கியதை அமெரிக்கா வரவேற்றுள்ளது. அதே நேரத்தில் அமெரிக்காவில்புலிகள் மீதான தடை தொடரும் என அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்கத் தூதரகம் கொழும்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தீவிரவாதத்தை புலிகள் முழுவதுமாககைவிடும் வரை அமெரிக்காவின் தடை நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியாவிலும் தடை தொடரும்:
புலிகள் மீதான தடையை நீக்கப் போவதில்லை என இந்தியா தெரிவித்துவிட்டது. அதே போல பிரிட்டனும் தடையை நீக்கமாட்டோம் என அறிவித்துள்ளது.
பேச்சுவார்த்தைக்கு இடம் தேர்வு:
இதற்கிடையே தாய்லாந்தில் பேச்சு நடத்தப்படும் இடத்தை புலிகளும் இலங்கை அரசும் முடிவு செய்துவிட்டன. தாய்லாந்துநாட்டின் யோசனைப்படி அந் நாட்டில் உள்ள சத்தாஹிப் என்ற இடத்தில் இந்தப் பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications