தமிழகத்துக்கு எதிராக வழக்கு: கர்நாடகம் திட்டம்
டெல்லி:
தமிழகத்துக்கு தினமும் 1.25 டி.எம்.சி. நீர் விட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து வழக்குத் தாக்கல் செய்ய கர்நாடகம் திட்டமிட்டுள்ளது.
அமெரிக்கா புறப்படும் முன் 9ம் தேதிக்குள் காவிரி ஆணையக் கூட்டத்தை நடத்த பிரதமர் வாஜ்பாய்க்கு அவகாசம் இல்லை. இந்தக் கூட்டம் நடக்கும்வரை தமிழகத்துக்கு கர்நாடகம் தண்ணீர் தர வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வாஜ்பாய் 15ம் தேதி தான் இந்தியா திரும்புகிறார். அதுவரை தொடர்ந்து தமிழகத்துக்குத் தண்ணீர் தர விரும்பாத கர்நாடகம் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைஎதிர்த்து மேல் முறையீட்டு வழக்குத் தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
கிருஷ்ணா-சோனியா சந்திப்பு:
காவிரி மற்றும் வீரப்பன் விவகாரங்களால் கர்நாடகத்தில் ஏற்பட்டுள்ள வன்முறை, போராட்டங்கள், அரசியல் நெருக்குதல்கள் குறித்து நேற்றிரவுடெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் முதல்வர் கிருஷ்ணா ஆலோசனை நடத்தினார்.












Click it and Unblock the Notifications