For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரஜினியை காட்டுக்குள் அனுப்ப வேண்டும்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

நாகப்பாவை மீட்க ரஜினியை காட்டுக்குள் அனுப்பி வீரப்பனுடன் பேச்சு நடத்த வேண்டும் என்று தடை செய்யப்பட்ட தமிழர் விடுதலைப்படையின் தலைவர் மாறன் கூறினார்.

தமிழர் விடுதலைப் படை அரசால் தடை செய்யப்பட்ட அமைப்பு. வீரப்பனுடன் சில ஆண்டுகளுக்கு முன் உறவு ஏற்படுத்திக் கொண்டது.வீரப்பனைத் தங்களது தலைவராகவும் அது அறிவித்துள்ளது.

இந்த அமைப்பின் தலைவர் மாறன், ராஜ்குமார் காட்டுக்குள் இருந்தபோது, மாறனும் உள்ளேயே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.மாறன் தற்போது கைதாகி பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

திண்டிவனம் அருகே சமீபத்தில் ஒரு ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது. இதுதொடர்பாக மாறன் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.இந்த வழக்கில் ஆஜராவதற்காக பூந்தமல்லி சிறையில் இருந்து செங்கல்பட்டு கோர்ட்டுக்கு மாறன் அழைத்து வரப்பட்டிருந்தார்.

நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு வெளியே வந்த மாறன் செய்தியாளர்களைப் பார்த்து ஆவேசமாக பேசினார். எங்களதுகோக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் ஆயுதம் ஏந்திப் போராடவும் தயங்க மாட்டோம்.

எங்கள் அமைப்பு மீதான தடையை நீக்க வேண்டும். விடுதலைப் புலிகள் மீதான தடையும் நீக்கப்பட வேண்டும். காவி தண்ணீரைதமிழகத்திற்கு உடனடியாக கொடுக்க வேண்டும்.

ரஜினியை காட்டுக்குள் அனுப்பி வீரப்பனுடன் பேசி நாகப்பாவை மீட்டுக் கொள்ளுங்கள். அவர்தான் அதற்கு சரியான ஆள் என்றார்மாறன்.

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X