தீவிரவாதிகள் தாக்கும் அபாயம்: சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு
சென்னை:
தீவிரவாதிகள் தாக்குதல் அபாயம் இருப்பதால் சென்னை விமான நிலையத்திற்கு கடுமையான பாதுகாப்புகொடுக்கப்பட்டுள்ளது.
அமெக்காவின் நியூயார்க் நகரில் கடந்த ஆண்டு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் உலக வர்த்தக மையம்முற்றிலும் தரைமட்டமானது. உலகையே உலுக்கிய இந்த சம்பவத்தின் முதலாண்டு நினைவு நாள் இன்றுஅனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி இந்தியாவின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்டநகரங்களில் விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை-மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மிகக் கடுமையான பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமானநிலையத்தின் ஒவ்வொரு பகுதியையும் பாதுகாப்புப் படையினர் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
விமானை நிலையத்திற்கு முன்பாக மட்டும் சுமார் 300 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். 24 மணி நேரமும் இந்தப்பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications