9000 கன அடியாவது கிடைத்ததே: திருநாவுக்கரசர்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவுடன் பிரதமர் வாஜ்பாய் பேசியதால் தான் தமிழகத்திற்கு தினசரி 9000 கன அடிநீராவது கிடைத்தது என்று மத்திய கப்பல் துறை அமைச்சர் திருநாவுக்கரசர் கூறினார்.
திருச்சியில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
காவிரிப் பிரச்சினையில் வாஜ்பாயை தமிழக முதல்வர் ஜெயலலிதா குறை கூறுவது சரியல்ல.
காவிரி ஆணையக் கூட்டத்தின் போது தமிழகத்திற்கு 5000 கன அடி நீர் தான் கொடுக்க முடியும் என்று கிருஷ்ணாஉறுதியாகக் கூறினார்.
ஆனால் பிரதமர் தலையிட்டு அவரிடம் பேசிய பிறகே 9000 கன அடி நீர் கொடுக்க முன் வந்தார் கிருஷ்ணா.
எனவே பிரதமரைக் குறை கூறுவதை ஜெயலலிதா விட்டு விட வேண்டும் என்றார் திருநாவுக்கரசர்.
-->












Click it and Unblock the Notifications