சம்பா சாகுபடி: கல்லணையிலிருந்து நீர் திறப்பு

Subscribe to Oneindia Tamil

கல்லணை:

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் கல்லணைக்கு வந்து விட்டதால் சம்பா சாகுபடிக்காககல்லணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

மேட்டூர் அணையிலிருந்து சம்பா சாகுபடிக்காக தமிழக அரசு தண்ணீர் திறந்து விட்டு வருகிறது. சுமார் 15,000 கனஅடி நீர் வரை திறந்து விடப்படுகிறது.

மேட்டூரில் கடந்த 6ம் தேதி திறக்கப்பட்ட தண்ணீர், நேற்று கல்லணைக்கு வந்து சேர்ந்தது.

இதையடுத்து கல்லணையிலிருந்து சம்பா சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இதற்கான சிறப்பு பூஜைகளும்நேற்று நடந்தன. கல்லணைக்கு தற்போது விநாடிக்கு 2,000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

இந்த தண்ணீர் மூலம் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டனம், புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்களில் காவிரிபாசனப் பகுதிகளில் உள்ள 13 லட்சம் ஏக்கர் சம்பா பயிர் பலனடையும்.

மேட்டூரில் தற்போது 62.48 அடி தண்ணீர் இருப்பு உள்ளது. அணைக்கு விநாடிக்கு 7028 கன அடி நீர் வருகிறது.அணையிலிருந்து 15,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டுக் கொண்டுள்ளது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+