மதுரை போலீசாருக்கு மீண்டும் "அல்வா": மருத்துவமனையிலிருந்து தப்பிய கைதி
மதுரை:
மதுரை சிறையிலிருந்து கைதி ஒருவனை சிகிச்சைக்காக மருத்தவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது அவன்போலீசாரை ஏமாற்றி விட்டுத் தப்பிவிட்டான்.
மதுரை போலீஸாரின் பிடியிலிருந்து கைதிகள் தப்புவது சகஜமாகி விட்டது. இமாம் அலி தப்பியதற்குப் பிறகுமற்றொரு முக்கியமான கைதி போலீஸாரின் பிடியிலிருந்து தப்பியுள்ளான்.
மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்தவர் உருமாட்டி தேவர். இவரது மகன் மணிகண்டன். திருட்டு வழக்கு ஒன்றில் கைதுசெய்யப்பட்டிருந்த மணிகண்டன் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளன.
கைது செய்யப்பட்டிருந்த மணிகண்டன் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தான். இந்த நிலையில்அவனது ரிமாண்ட் காலத்தை நீட்டிப்பதற்காக போலீஸார் அவனை கோர்ட்டுக்கு கொண்டு சென்றனர்.
அப்போது போலீஸாரின் பிடியிலிருந்து தப்பி திடீரென்று ஓடத் தொடங்கினான் மணிகண்டன். அதிர்ச்சியடைந்தபோலீஸார் உடனடியாக சுதாரித்துக் கொண்டு துரத்தினர்.
மாட்டுத் தாவணி பஸ் நிலையம் வரை ஓடிய மணிகண்டன், போலீஸாரிடம் வகையாகச் சிக்கிக் கொண்டான்.பின்னர் மீண்டும் சிறைக்குக் கொண்டு வரப்பட்டு அடைக்கப்பட்டான்.
இந்நிலையில் தனக்கு உடல் நிலை சரியில்லை என்று மணிகண்டன் கூறவே அவனை போலீசார் மருத்துவனைக்குக்கொண்டு சென்றனர். அங்கு சில பரிசோதனைகள் செய்யுமாறு டாக்டர்கள் கூறியிருந்தனர்.
அப்போது கைவிலங்கிடப்படாத நிலையில் இருந்த மணிகண்டன், மருத்துவமனையிலிருந்து திடீரென்று தப்பிவிட்டான். இந்த முறை போலீஸாரால் மணிகண்டனைப் பிடிக்க முடியவில்லை.
தப்பியோடிய மணிகண்டனைப் பிடிக்க போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications